top of page

மார்ச் 2,3 (March 2,3)

(02-மார்ச்)


*குன்னக்குடி வைத்தியநாதன்*

பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள்.

வயலின் கற்றுக்கொண்டு தனது 12வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976ஆம் ஆண்டு முதல் வயலின் இசையை கொண்டு கச்சேரி செய்தார்.




1969ஆம் ஆண்டு 'வா ராஜா வா' என்ற திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

*'வயலின் சக்கரவர்த்தி'* என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.


****************************************************************************************************************

*ரா.பி.சேதுப்பிள்ளை*

எழுத்தாலும் செந்தமிழ்ப் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 1896ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் பிறந்தார்.

இவர் 1936 முதல் 25 ஆண்டுகாலம் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்க தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வையாபுரிப் பிள்ளைக்கு உதவினார். வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார்.




இவர் 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 4 நூல்களை பதிப்பித்தார். இவரது 'தமிழின்பம்' என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சொல்லின் செல்வர் என்று புகழப்பட்டார்.

'செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை' என்று போற்றப்பட்ட இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 65வயதில் (1961) மறைந்தார்.


*************************************************************************************************************


(03-மார்ச்)

*உலக வனவிலங்குகள் தினம்*

உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.



வனவிலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது, அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.


***********************************************************************************************************

(03-மார்ச்)

*அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்*

தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.




பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார்.

ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1922ஆம் ஆண்டு மறைந்தார்.

***************************************************************************************************************


*ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா*

இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 1839ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தார்.

தந்தையின் நிறுவனத்தில் 29வயது வரை வேலை செய்து வந்தார். 1868ஆம் ஆண்டு ரூ.21000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கினார்.




தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

இவருடைய வாழ்நாள் கனவான ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக திகழும் டாடா குழுமத்திற்கு அஸ்திவாரமாக இருந்த இவர் 1904ஆம் ஆண்டு மறைந்தார்.



****************************************************************************************************************

38 views0 comments

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

bottom of page